Monday, February 7, 2011

எகிப்து மக்கள் புரட்சி: TNTJ வின் நிலை

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!  இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய புரட்சி வந்து விட்டதாகவும், அதில் ஒரு பகுதியாக எகிப்து நாட்டில் புரட்சி நடந்து கொண்டு இருப்பதாகவும் உலகம் முழுவதுமுள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன, அதிலும் குறிப்பாக இஹ்வான்கள் எனப்படும் குர்ஆன் ஹதீஸிற்கு நேர் மாற்றமான கொள்கை கொண்ட ஒரு கூட்டம் தான் இதற்கு தலைமை தாங்குவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.  இவர்கள் யார் என்றால்  இஸ்லாமிய சமுகத்தில் முஸ்லிம்கள் சக முஸ்லிம்களை கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர்கள் (கண்டிப்பாக நாம் அல்ல, திருவிடச்சேரி சம்பவம்).  மேலும் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு ஆணி வேராக இருப்பவர்கள் இவர்கள் தான்.  இவர்கள் தலைமையில் ஒரு புரட்சி உருவானால் அதில் இஸ்லாத்திற்கு நேர் எதிராக தான் இருக்கும்.  மேலும் இன்று அங்கே ஆட்சி புரியும் எகிப்து நட்டு அதிபர் முபாரக் இஸ்லாத்திற்கு நேர் எதிரானவர் என்று  கருத்து இந்த கொள்கை அற்ற இஹ்வான்கள் கூட்டத்தால் பரப்ப பட்டு வருகிறது.  ஆனால் எகிப்து நாட்டை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் கூட்டாளியாக மாற்றி கட்டியது இவர் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அப்படியே ஒரு மக்கள் புரட்சி வந்தாலும் அதற்கு தலைமை தாங்க கூடிய தகுதி நம் அண்ணனுக்கு மட்டும் தான் உள்ளது என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும்.  எனவே உலகம் முழுவதும் பரவி இருக்கும் நமது தௌஹீத் சகோதரர்கள் இவர்களுக்கு எவ்வித ஆதரவும் தர வேண்டாமென்று தலைமை சார்பாக கேட்டு கொள்கிறோம்.    

No comments:

Post a Comment