Sunday, February 13, 2011

கடையநல்லூரில் மீண்டும் ஏகத்துவத்தை நிலைநாட்டிய TNTJ


கடையநல்லூரில் மீண்டும் ஏகத்துவத்தை   நிலைநாட்டிய TNTJ 

கடந்த பிப்ரவரி  11 அன்று  கடையநல்லூர் மதினா நகரைச் சேர்ந்த மைதீன் என்பவரின் தாயார் ஜனாஸாவின் தொழுகையில் .சைபுல்லாஹ் தலைமையிலான ரவுடி கும்பல் மதினா நகர் பள்ளிக்கு நுழைந்து பிரச்சினை செய்ய ஆரம்பித்தது. சைபுல்லாஹ் மற்றும் அவருடைய  அண்ணன் சேகனா முஹம்மது கோரி  சின்ஸா பாவா போன்றோர் வந்தவுடன் ஜனாஸா தொழுகை நடத்த தயாராக இருந்த இமாம் சாகுல் அவர்களை தாக்க தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜமாத்தார்கள் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என்று கேட்ட போது மோதிவிளைவு இஸ்மாயில் என்ற பெரியவரை  கீழே தள்ளி முகத்தில் மிதித்தனர்.  இதைப் பார்த்து தொழுவதற்காக வந்திருந்த அனைத்து மக்களும் பிரச்சினை செய்தவர்களிடம் ஏன் இங்கு வந்து பிரச்சினை செய்கிறிர்கள் என்று கேட்டதற்கு எங்களை எவனாலுiம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆணவமாக பேசி திருவிடைச்சேரி சம்பவம் ஞாபகம இருக்கின்றதா அங்கு ஜமாத் தலைவரை கொன்றது போல் இங்கேயும் எல்லோரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு நேராக காவல் நிலையம் சென்று வழக்கம் போல் ஜமாத்தார்கள் மீது பொய் புகார் கொடுத்தனர்.







ஆனால்  அவர்களால் தாக்கப்பட்ட இமாம் சாகுல் ஹமீது அவர்களும் ஜமாத் பொருப்பாளர் மோதிவிளவு இஸ்மாயில் அவர்களும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


      இந்த அநாகரிக செயலினால் கடையநல்லூர் முஸ்லிம்கள்
அனைவரும் மிகவும் வருத்தத்துடனும் ஆவேசமான கோபத்துடனும் உள்ளனர்.இதைப் பற்றி மதினா நகர் ஜமாத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் கூறும் போது இதுநாள் வரையில் இந்த பள்ளியில் ஒரு பிரச்சினை கூட வந்தது இல்லை. ஆனால் இந்த சைத்தானிய சக்திகள் என்று சமுதாயத்தில் நுழைந்தார்களோ அன்றிலிருந்து இந்த சமுதாயம் குழப்பத்தையும் பிரச்சினையையும் சந்தித்து கொண்டு இருக்கிறது.
மேலும் இதில் கொடுமையான நிகழ்வு என்னவெனில் அடிவாங்கி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்;ட அப்பாவி ஜமாத்தார்கள் மீது
சைபுல்லாஹ் சகாக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.

காசை வாங்கி கொன்டு கடையநல்லூர் காவல்துறை அப்பாவி
ஜமாத்தார்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.கடையநல்லூர் முஸ்லிம்கள் அனைவர்களும் TNTJ-வை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் அழுத்தமாக காணப்படுகின்றது.

நன்றி
நல்லூர்.காம்


No comments:

Post a Comment