Sunday, January 30, 2011

மாநில தலைவரை நீக்கிய மடையர்கள்

சேலத்தில் நடந்த பொதுகுழுவில் நமது பெரும் மதிப்பும் மரியாதைக்குரிய தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாற்றி விட்டு மீண்டும் அண்ணன் PJயை மாநில தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.  இது நமது தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபிக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.  மேலும் அவர் மாநில தலைவராக இருந்த காலத்தில் TNTJயை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டினார்.  எனவே அவரை நீக்கியது  உண்மையான தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது .  எனவே மீண்டும் அடுத்து கூடும் செயற்குழுவில் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாநில தலைவராக மாற்ற   வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவரது சார்பில் தெரிவித்துகொள்கிறோம்.  மேலும் நடந்து முடிந்த மதுரை மற்றும் சென்னை ஆர்பாட்டம்களுக்கு வசூல் கணக்கு கேட்ட காரணத்தினால் தான் அவரை நீக்கியதாக கருதப்படுகிறது.  எனவே TNTJ வின் புதிய தலைவர்கள் இந்த கணக்குகளை மக்கள் மன்றத்தில் சமர்பிப்பார்களா?

No comments:

Post a Comment